தாம்பரம் - நாகர்கோவில் இடையே டிச.16ம் தேதி முதல் வாரம் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாம்பரம் - நாகர்கோவில் இடையே டிச.16ம் தேதி முதல் வாரம் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இரவு 7.25க்கு ரயில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்கத்தில் நாகர்கோவிலில் மாலை 4.15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.15க்கு தாம்பரத்தை ரயில் வந்தடையும்.

Related Stories: