நெமிலி: நெமிலி ஒன்றிய பள்ளூர் ஊராட்சி ஆலப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேற்றில் இறங்கி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெமிலி ஒன்றியம் பள்ளூர் ஊராட்சியில் உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி மண் சாலையாக உள்ளதால், தார் சாலை அமைக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் கடந்த மாதம் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் கன மழையால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறி சேறும் சகதியும் சூழ்ந்துள்ளது.