நிவர் புயலின் போது பணியாற்றிய ஊழியர்களுக்கு மற்றொரு நாளில் லீவு

சென்னை, :நிவர் புயலின்போது பணிபுரிந்த ஊழியர்கள் மற்றொரு நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 25ம் தேதி 16 மாவட்டங்களில் கடந்த 26ம் தேதி ஆக இரண்டு நாட்களுக்கு செலாவணி முறிச்சட்டம் 1881ன் படி பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதின் அடிப்படையில் கடந்த 25, 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது.

 எனவே கடந்த 25, 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு ஷிப்டில் பணிபுரிந்த அனைத்து பிரிவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் அரசு அறிவிப்பின்படி கடந்த 26ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்ட காரணத்தால் நவம்பர் 26ம் தேதி அன்று சில தொழிற்சங்கங்கள் அறிவித்த அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பணியாளர்கள் கலந்துகொள்ளாமல் பணிக்கு வருமாறு அறிவித்த சுற்றறிக்கை இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: