சென்னை: சென்னை அசோக் நகரில் தொழிலதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் போலீஸ் போல நடித்து 12 லட்சம் ரூபாய் பணமும், மற்றும் 45 சவரன் நகைகளை திருடி சென்றனர். அசோக் நகரில் 79-வது செக்டரில் வசித்து வருபவர் பாண்டியன். கேஸ் ஏஜென்சி நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்து வரும் இவரது வீட்டிற்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் தங்களை போலீஸ் என்று கூறி உள்ளே புகுந்துள்ளது. உரிமம் இல்லாமல் பாண்டியன் துப்பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்த அவர்கள் வீட்டின் கதவை பூட்டிவிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.