சென்னை: வேல் யாத்திரை தொடர்பாக 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரப்பியது போன்ற காரணங்களால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திய 1,241 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.