சென்னை: அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் முன்பு பதிவாளர் நேரில் ஆஜராகி ஆவணங்களை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்ப மீது ரூ.280 கோடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால், தமிழக அரசு தாமாக முன் வந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை கமிட்டியிடம் ஒப்படைக்க கோரி விசாரணைக்குழு கேட்டும் ஒப்படைக்காததால் பதிவாளர் கருணா மூர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.