பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு: 198 பேர் கல்லூரிகளை தேர்வு செய்தனர்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ் இடங்களை நிரப்புவதற்கான 8ம் நாள் கலந்தாய்வு நேற்று நடந்தது. 594 பேருக்கு நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. 92 பேர் வராத நிலையில் 502 பேர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவ அரசு மருத்துவக்கல்லூரிகளில் 46 எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 116 இடங்களும், அரசு பல்மருத்துவக் கல்லூரகளில் 19 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 17 இடங்கள் என 198 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

Related Stories: