சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வழக்குகள் குறித்து அவரின் வக்கீல் என்.ஜோதி, சென்னை அண்ணா நகரில் பேட்டி அளித்தபோது கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து சுமார் 80 நாட்கள் கழித்துதான் அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு புத்தகத்தில் எந்த இடத்திலும் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்து கூறப்படவில்லை. இறந்து போன மனிதர் மீது வழக்கு தொடர்ந்து நடத்தக்கூடாது என்பது தான் சட்ட விதி. இறந்து போன நபர் விடுதலையாகிவிட்டார் என்ற நிலையில் தான் இருந்தார். இறந்துபோனவர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் நீர்த்துவிடுகிறது என்பதுதான் சட்ட நிலைமை.