சென்னை: நாளை விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு தெரிவிப்பதாக தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். இதை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் எதிர்த்துப் போராடி வருகிறார்கள். தற்பொழுது இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் இணைந்து வருகின்ற 8ம் தேதி பாரத் பந்த் அறிவித்துள்ளது.