அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினம்: கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை.!!!

திருவாரூர்: அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினம் இன்று  நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்  அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர்  பக்கத்தில், அறிவுச் சூரியன், இந்நூற்றாண்டின் புதிய புத்தர்! எல்லோருக்குமான வழிகாட்டி -#BabasahebAmbedkar-ன் நினைவுநாளில், அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில்  அண்ணல் #அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினேன்!. சமூகநீதிச் சுடர் காப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: