சென்னை: அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த 26ம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் 24.11.2020 இரவு 9 மணி முதல் 26.11.2020, காலை 6 மணி வரை தடை உத்தரவு இருந்தது. எனவே இதன்படி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 25.அன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.