ஜெயங்கொண்டம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை மின்கம்பம், மரங்கள் விழுந்தது

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் விழுந்தது.புரெவி புயல் எதிரொலியால் ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் வசிக்கும் தஸ்தகீர் என்பவரது வீட்டின் அருகில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது.

இந்த மரம், வீட்டின் மீது விழுந்தது. இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் பல்வேறு இடங்களில் முருங்கை உட்பட பல்வேறு மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. சில இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து விழுந்த மின் கம்பங்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

Related Stories: