சந்தேக மரணமடைந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் பார்க்கும் முன் உடற்கூறாய்வு செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை

மதுரை: சந்தேக மரணமடைந்தவர்களின் சடலத்தை உறவினர்கள் பார்க்கும் முன் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த பின் தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. உடற்கூறாய்வுக்கு பின் நீதிமன்றம் செல்ல உறவினர்கள் முடிவெடுத்தால் உடலை பாதுகாக்க வேண்டும். மரணமடைந்தவர்கள் உடலை 48 மணி நேரம் பாதுகாத்து வைக்க வேண்டும். உடற்கூறாய்வு செய்யும் போது இறுதிவரை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இறந்தவர் உடலை உறவினர் அல்லது அவரது பிரதிநிதி பார்வையிட்டு வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: