இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும்; தவறினால் ரூ.10 லட்சம் அபராதம்: மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் மதுரைக் கிறை உத்தரவிட்டுள்ளது. குடமுழுக்கு விழா நடைபெறும் போது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. கரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் அளித்த மனுவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூர் கல்யாணபசுபதிஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிப்படி  அதாவது தேவார திருவாசம் ஒதி நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. நாளை நடைபெற உள்ள பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் ஆகம விதிப்படி நடத்த ரமேஷ் என்பவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோயில் நிர்வாகத்தினர் பதில் தராததை அடுத்து உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் மனுவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிகளில் குடமுழுக்கு நடத்துவதில் ஆட்சேபம் இல்லை எனவும் நீதிபதி கூறினார். குடமுழுக்கின் போது இனிவரும் காலங்களில் தமிழ் மொழி கட்டாயம் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழிலில் குடமுழுக்கு நடத்தாவிடில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் எச்சரித்துள்ளது. தஞ்சை பெரிய கோயில் நிகழ்வுக்கு பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா என உயர்நீதிமன்றம் கேட்டது. எனவே நாம் தமிழர் கட்சியின் இளஞ்செழியன் தொடர்ந்த வழக்கை தீர்ப்புக்காக மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

Related Stories: