மதுரை: இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த ஐகோர்ட் மதுரைக் கிறை உத்தரவிட்டுள்ளது. குடமுழுக்கு விழா நடைபெறும் போது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம்பெற வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. கரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் அளித்த மனுவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூர் கல்யாணபசுபதிஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிப்படி அதாவது தேவார திருவாசம் ஒதி நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. நாளை நடைபெற உள்ள பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் ஆகம விதிப்படி நடத்த ரமேஷ் என்பவர் கோரிக்கை விடுத்திருந்தார்.