தமிழகத்தில் மேலும் 1,428 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக பேருக்கு 1,428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 68,854 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 1,428 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 84  ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,398 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 7 லட்சத்து 62 ஆயிரத்து 15 பேர் குணமடைந்துள்ளனர். 10 ஆயிரத்து 999 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11,733 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: