சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி தற்போது, வங்கக்கடலில் `புரெவி’ புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.