தமிழ் தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழி திணிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தொடர்ந்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது சமஸ்கிருத மொழியில் செய்திகள் வாசிக்கப்படுவது என்ற மத்திய அரசின் முடிவினை கண்டிப்பதுடன்,    சமஸ்கிருத மொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் எனும் பிரச்சார் பாரதி அமைப்பின் உத்தரவை மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும்.ஒரு குறிப்பிட்ட மொழியை திணிக்கும் நடவடிக்கையை முற்றாக கைவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: