கோயம்பேட்டில் மீண்டும் மலர் சந்தை..!

சென்னை: டிச. 14-ம் தேதி முதல் கோயம்பேட்டில் மலர் சந்தை திறக்கப்படும் என மலர் சந்தை சங்க தலைவர் மூக்கையன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கோயம்பேட்டில் மூடப்பட்ட மலர் சந்தை டிசம்பர் 14 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த 470 கடைகளும் அரசின் விதிமுறைகளுடன் இயங்கும் எனவும் கூறினார்.

Related Stories: