தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்கு கொரோனா

சென்னை:  தமிழகத்தில் நேற்று 65,058 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 1,404 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தமிழகத்தில் கொரோன பாதிப்பு எண்ணிக்கை 7,83,319 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,411 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதுவரையில், 7,60,617 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று 10 பேர் உயிரிழந்தனர். இதில், 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதன்படி, இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி 11,722 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளனர். தற்போது, 10 ஆயிரத்து 980 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: