சென்னை: நிவர் புயலால் நிறுத்தப்பட்டிருந்த பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்கியது. இன்று முதல் டிசம்பர் 10 ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் மூன்று நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. மேலும், ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 21-ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.