டிச.9ம் தேதி வரை சூரப்பா மீது புகார் அளிக்கலாம்: நீதிபதி கலையரசன் தகவல்

சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மீது நேரில் புகார் அளிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அதற்கான தேதியை டிசம்பர் 9ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தெரிவித்தார். inquirycomn.vc.annauniv@gmail.com என்ற இ-மெயில் மற்றும் தொலைபேசி மூலம் ஏராளமானவர்கள் புகார் அளித்து வருகின்றனர். அதிக புகார்கள் வந்ததால் கடந்த 25ம் தேதி முதல் மேலும் 10 நாட்கள் பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள விசாரணை அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகவோ, நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என அறிவித்தார். இந்த நிலையில், துணைவேந்தர் சூரப்பா மீது நாளுக்கு நாள் புகார் வந்து கொண்டே இருப்பதால் புகார் அளிக்கும் நாட்களை வரும் திங்கள் கிழமை (30ம் தேதி) முதல் மேலும் 10 நாட்களுக்கு டிசம்பர் 9ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: