சாயல்குடி: தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் வாங்குவதற்கு வெட்கப்படாத நிலையே உள்ளது என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி வேதனை தெரிவித்தார்.ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி நாகாச்சியில் ராமகிருஷ்ண மடத்தின் புதிய வளாகத்தில் சமுதாயக் கூடம், பிரார்த்தனை கூடம், சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகித்தார். மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் வரவேற்றார்.