மதுரை: மதுரை சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜகுமாரி ஜீவகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனைகளான தீபா, சங்கீதா ஆகியோர் சர்வதேச போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 84 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இவர்களைப் போல பல மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல சாதனைகள் படைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்குரிய நிரந்தர வேலைவாய்ப்ைப அரசுகள் வழங்கவில்லை. இருவரையும் அங்கீகரிக்கும் வகையில் நிரந்தர அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.