குளச்சல்: குளச்சல் தீயணைப்பு நிலையம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலைய கட்டிடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு தீயணைப்பு வாகனத்தை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்படுகிறது. தீ விபத்து குறித்த அழைப்புகள் வரும்போது, வாகனத்தை உடனடியாக எடுத்து செல்ல முடியாமல் பஸ்கள் இடையூறாக உள்ளன. இந்த நிலையில் குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட உப்பளம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் சுமார் ரூ.1 கோடி செலவில் கடந்த 15.03.2018ல் புதிய கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது. 2019ல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 13 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.