சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை சைதாப்பேட்டை அரசு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 250 பேருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நிவாரண உதவிகளை வழங்கினார். நிவாரண முகாமில் இருந்தவர்களிடம் குறைகளை கமல்ஹாசன் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலை நினைத்தாவது மக்களுக்கு அரசு உதவி செய்ய முயற்சி செய்ய வேண்டும். கஜா புயலுக்கான நிவாரணமே இன்னும் வழங்கப்படவில்லை. நாங்கள் அரசாங்கம் கிடையாது. எங்களிடம் கஜானா இல்லை. தனி இயக்கம் என்பதால் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.