கடலூர்: நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரிய பாதிப்புகள் இல்லை என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்தார். கடலூரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகறிது என கூறினார். நிவர் புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய தொடங்கியவுடன் மதிப்பீடு செய்யும் பணி துவங்கும் என கூறினார். பயிர்களை பொறுத்தவரை 2 நாட்களுக்கு பிறகு தான் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும் என தெரிவித்தார். நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவி்ல்லை என கூறினார்.