ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த பண்ருட்டி கிராமத்தில் காரந்தாங்கல் ஏரி உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுபாட்டில் உள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு இந்த ஏரியில் இருந்து நீர்பாசனம் செய்யபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஏரி கரையை ஒட்டி ராட்சத ஆயில் பைப் புதைக்கபட்டுள்ளது. இதனால் கரை பலவீனமாக இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பண்ருட்டி காரந்தாங்கல் ஏரி நிரம்பியது. நேற்று முன்தினம் இரவு ஆயில் பைப் புதைக்கபட்ட பகுதியில் கரை திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.