செய்யாறு: செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாக்களில் தொடர் மழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. நெற்களம்களில் 4 லட்சம் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வெம்பாக்கம் தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக, சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது. அதேபோல் அறுவடை செய்து நெற்களம்களில் வைத்துள்ள 4 லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றனர்.