சென்னை: இடி, மின்னலின் போது டிவி, மொபைல், கணினி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்ச்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதடைந்த சாதனங்களை உபயோகப்படுத்தக்கூடாது. மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வையரின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு, துணி காய வைப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.