சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் வழங்கிய அறிவுறுத்தல்கள் பின்வருமாறு: தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளில் 847 ஊராட்சிகள் மழை வெள்ளத்தால் பாதிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரகப் பகுதிகளிலும் பொதுமக்களை தங்க வைக்க 16,331 கட்டடங்கள் தயார்நிலையில் உள்ளன. ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 725 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளன.