ஆவடி: கடன் பிரச்சனையில் தவித்த நபர், மனைவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி சிரஞ்சீவி நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் கணேசன் (51). இவர் கேஸ் ஏஜென்சியில் பணியாற்றினார். இவரின் மனைவி சுப்புலட்சுமி. தனது மகளின் திருமணம் மற்றும் குடும்ப செலவுக்கு உறவினர்கள், நண்பர்களிடம் கணேசன் கடன் வாங்கியதாக தெரிகிறது. பின்னர் அந்த பணத்தை கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கடும் மனவேதனையில் இருந்துள்ளார்.