அண்ணா நகர்: சென்னை அமைந்தகரை பிபி தோட்டம் 5வது தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் (45). இவரது மனைவி கோமதி (43). இவர்களது மகள் மாலதி(14) அதே பகுதியில் அவரது பாட்டி சகுந்தலா (68) என்பவரது வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுமி மாலதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது, இதனைப் பார்த்த தாய் கோமதி விளையாடியது போதும், வீட்டிற்குள் வந்து அமைதியாக இரு என கூறியுள்ளார். இதில் மனமுடைந்த சிறுமி மாலதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.