சென்னை: நிவர் புயல் கரையை கடக்கும்போது பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நிவர் புயலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு நடந்தது. பின்னர் அமைச்சர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் தேவையான அளவுக்கு மின்கம்பங்கள், பணியாளர்கள், உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். 1.50 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு கருதி புயல் கரையை கடக்கும் போது மின்சாரத்தை துண்டிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.