தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கம் ஆதரவு

சென்னை: நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் நடைபெறும் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை: அனைத்து தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இந்தசூழலில், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். பஞ்சப்படி அளவீடு அடிப்படை ஆண்டு 2016 என்று மாற்றியதை உடனே ரத்து செய்ய வேண்டும். பிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்றையை உடனே வழங்கிட வேண்டும். வங்கி, காப்பீடு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் தொகுப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வெற்றிபெற ஓய்வூதியர்களாள் சங்கம் ஆதரவு அளிக்கும்.

Related Stories: