மீனம்பாக்கம்: திருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாளை சென்னை வருகிறார். இதனால் சென்னை விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருப்பதிக்கு செல்லும் வழியில் நாளை காலை 6.30 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார். காலை 9.15 மணிக்கு அவர், சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு, அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், காலை 9.45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு செல்கிறார். இதையடுத்து, நாளை மாலை திருப்பதியில் தரிசனத்தை முடித்து விட்டு ராணுவ ஹெலிகாப்டரில் மாலை 5.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு மீண்டும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், மாலை 5.45 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.