சென்னை: புயல் எச்சரிக்கை எதிரொலியாக, முதல்வரின் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்மசாமி தலைமையில் வரும் 25ம் தேதி முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.