சென்னை: வங்கக் கடலை உள்ளடக்கிய வடக்கு இந்திய கடல் பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டு வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழைக் காலங்களில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் வானிலை ஆய்வில் ஈடுபட்டு வரும் நாடுகளிடையே உள்ளது. இதையடுத்து, வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து மேற்கண்ட கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டின. இந்த பட்டியலில் 64 பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இந்த பட்டியலில் கடைசியாக இடம் பெற்றுள்ள புயலின் பெயர் ஆம்பன். இதற்கு பிறகு பெயர் வைக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தற்போது 2020ம் ஆண்டு முதல் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டபட்டுள்ளன.