சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனரும் தலைவருமான தொல்.திருமாவளவன் அறிக்கை: இந்தியாவில் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 26, 27ம் தேதிகளில் தேசிய அளவில் நடைபெறும் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. முன்னதாக, 29 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்துவிட்டு, 4 தொகுப்புகளாக மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த 8 மணி நேர வேலையை ஒழித்துவிட்டு, 12 மணி நேர வேலை என தொழிலாளர்களிடம் பாஜ அரசு அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது.