ஊத்துக்கோட்டை: வருகிற 29ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் பெண்கள் தங்களின் வீடுகளில் விரதம் இருந்து அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். இந்நிலையில், பெரியபாளையம் அருகே அகரம், தண்டலம், ஊத்துக்கோட்டை அருகே புதுக்குப்பம், பாலவாக்கம் உள்ளிட்ட 2க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்திகை தீபத்திற்காக அகல் விளக்குகள் தயார் செய்து அதை வெயிலில் காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.