திருவள்ளூர்: தாம்பரம் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி(38). இவர் தனது மனைவி கனகதுர்க்கா(36) மற்றும் மகன் ரித்தீஷ்(8) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் படப்பையில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, வண்டலூர் வெளிவட்ட சாலையில் காவல்சேரி அருகே சென்றபோது லாரி நிற்பதற்கான எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக ஆனந்தஜோதி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மகன் ரித்தீஷ் தாய், தந்தை கண்ணெதிரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான்.