காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் நவம்பர் 21ம் தேதிமுதல் டிச.10ம் தேதிவரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் (6-18 வயது) மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை(0-18 வயது) பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.