அண்ணாநகர்: அமைந்தகரை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களது மகள் சங்கீதா (27). இன்ஜினியரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சங்கீதா, தனது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அறையில் நிறைய எறும்புகள் இருந்ததால், அவற்றை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பற்றி, உடல் முழுவதும் மளமளவென பரவியது. இதனால், அலறி கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளை காப்பாற்ற முயன்றனர்.