சென்னை: துரைக்கண்ணுவிடம் ஆளுங்கட்சியினர் கொடுத்த ரூ.800 கோடி விசாரணைக்கு பயந்து, அவரது பினாமியும், உதவியாளருமான ஒருவர் கிராமத்தை விட்டே காலி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கட்சியை பலப்படுத்த, கட்சி தலைமை கொடுத்த ரூ.800 கோடியில் 50 சதவீதம் மீட்கப்பட்டுள்ளது. மீதி 50 சதவீத பணத்தை மீட்க கட்சி தலைமை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. துரைக்கண்ணுவின் பர்சனல் உதவியாளராக கபிஸ்தலம் பவுண்டு கிராமத்தை சேர்ந்த ஒருவர் இருந்துள்ளார். அவரது சமூகத்தை சேர்ந்த இவர், பினாமியும், நெருக்கமானவருமாக இருந்துள்ளார். இவர் துரைக்கண்ணுவின் பலத்தை பின்புலமாக வைத்து அவருக்காக ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, எதிரானவர்களை மிரட்டுவது என அதிகாரம் செய்து வந்துள்ளார்.