காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் சின்மயா சிவில் சர்வீஸ் பயிற்சி மையமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டி நெறிமுறை பயிற்சி வகுப்பு நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் ரம்யா வரவேற்றார். பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர், கல்லூரி செயலாளற் விஜயராஜ், ஏஜிஎம் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.