பொன்னேரி: பொன்னேரியில் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர் கூட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமார், பொன்னேரி நகர செயலாளர் டாக்டர் விஸ்வநாதன் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜ் கலந்துகொண்டார். அவருக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது, “வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியலில் புதிய நபர்களை பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளில் திமுக தொண்டர்கள் சிறப்பாக செய்ய வேண்டும்.