உதயநிதி கைது கண்டித்து மறியல்

திருவள்ளூர்: நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்ய சென்ற திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அராஜகமாக கைது செய்த போலீசாரை கண்டித்து திருவள்ளூரில் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் வி.ஜே.உமா மகேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் மகேஷ், ஒன்றிய நிர்வாகிகள் ராஜ்மோகன், ஜனாபாபு, சுமன், இளையராஜா, கடம்பத்தூர் பிரகாஷ், சதீஷ் உள்பட 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டவுன் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Related Stories: