சென்னை: நாடு முழுவதும் 26ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தின்போது, அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து துறை செயலாளர்களுக்கு கடிதம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 26ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டாலோ அல்லது அலுவலகங்களுக்கு வராமல் புறக்கணித்தாலோ அல்லது அரசு அலுவலகங்களில் பணி பாதிக்கும் வகையில் ஊழியர்கள் ஈடுபட்டாலோ தமிழ்நாடு அரசு ஊழியர்கள் 1973 விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.