சென்னை: பாஜஅரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கோவையில் இன்று ஏர் கலப்பை பேரணி தமிழக காங்கிரஸ் சார்பில் நடைபெறுகிறது. இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய பாஜ அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக 22ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் கோவை, கருமத்தம்பட்டியில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடும், மாலை 5.30 மணியளவில் மாபெரும் ஏர் கலப்பை பேரணியும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை ஏற்கிறார்.