டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக சிறிது காலம் வேறு பகுதியில் குடியேறுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நுரையீரல் பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு குறித்து அவரது மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காற்று மாசு காரணமாக சிறிது காலம் டெல்லியை விட்டு வெளியேறி வேறு பகுதியில் குடியேற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், கூறப்படுகிறது.