ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால் சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த தடுப்பணையில் ஆபத்தை உணராமல் கிராம மக்கள் கும்பல் கும்பலாக குளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரும், நேற்று முன்தினம் பிச்சாட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சுருட்டபள்ளிக்கு வந்தது. இவற்றின் உபரி நீர் வருகையால், தற்போது ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால், ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஒருசிலர் தடுப்பணையின் ஆழம் தெரியாமலும், ஆபத்தை உணராமலும் குளித்து வருகின்றனர்.